போக்சோ சட்டத்தில் ஹோமியோபதி மருத்துவர் கைது

காங்கயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Published on

காங்கயம்: காங்கயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர், ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவன்குமார் (50). இவர் ஊத்துக்குளி பகுதியில் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு பணிக்கு வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் ஜீவன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com