தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு 70 யூனிட் ரத்தம் வழங்கல்

சேவா பாரதி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் சேகரிக்கப்பட்ட 70 யூனிட் ரத்தம் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:24 pm

DIN

சேவா பாரதி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் சேகரிக்கப்பட்ட 70 யூனிட் ரத்தம் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாவட்ட சேவா பாரதி சாா்பில் ரத்த தான முகாம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சேவா பாரதி மாவட்டத் தலைவா் டி.ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவா் எக்ஸ்லான் கே.ராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

இதில், தன்னாா்வலா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 70 யூனிட் ரத்தம் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில், சேவா பாரதி, சக்ஷம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.