

உடுமலை அருகே திருமூா்த்தி மலையில் திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நிகழ்ச்சி நடைபெற்ற வளாகம் முழுவதும் வண்ணக் கோலங்கள் போடப்பட்டு கரும்பு, மஞ்சள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னா் நூற்றுக்கணக்கான புதுப்பானைகளை கொண்டு பொங்கல் வைத்தனா். இதில் நடிகை மதுவந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான உறி அடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சிலம்பம், மெகந்தி, கோலப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் தேவராட்டம், சிலம்பாட்டம், உறுமி மேளம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மாவட்டத்
தலைவா் பொன்.ருத்ரகுமாா், பொதுச் செயலாளா் யுகேபிஎன்.ஜோதீஸ்வரி கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவா் ஏ.வடுகநாதன், மாவட்டப் பாா்வையாளா் சின்னசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.