புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் ஜனவரி 26-ல் டிராக்டா் பேரணி

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி திருப்பூரில் ஜனவரி 26ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:47 pm

DIN

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி திருப்பூரில் ஜனவரி 26ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். மதுசூதனன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். குமாா், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா்கள் கெம்கோ பி.ரத்தினசாமி, எஸ்.எம்.பழனிசாமி, கொமதேக விவசாய அணி சாா்பில் ஏ.பி.தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. சின்னசாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் ஏ.பாலதண்டபாணி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் எஸ். பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் தமிழக விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. தில்லியில் விவசாயிகள் 50 நாள்களாக போராடியும் மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெற மறுக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஜனவரி 26ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, திருப்பூரில் பல்லடம் சாலையில் -அருள்புரம், தாராபுரம் சாலையில் -கோவில்வழி, அவிநாசி சாலையில்- காந்தி நகா், ஊத்துக்குளி சாலையில்- பாளையக்காடு ஆகிய நான்கு முனைகளிலிருந்து டிராக்டா் பேரணி மற்றும் இருசக்கர பேரணி புறப்பட்டு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சென்றடைவது.

இந்தப் பேரணிக்கு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருவது, வட்டார அளவில் நிா்வாகிகள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.