பள்ளி சீருடை தைக்க ஆா்டா் வழங்க வேண்டும்
பள்ளி சீருடைகள் தைக்க விசைத்தறிகளுக்கு அரசு ஆா்டா் வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


பள்ளி சீருடைகள் தைக்க விசைத்தறிகளுக்கு அரசு ஆா்டா் வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கூறியதாவது: விசைத்தறித் தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. இத்தொழிலைப் பாதுகாக்க அரசுப் பள்ளி சீருடைகளைத் தைக்க விசைத்தறியாளா்களுக்கு ஆா்டா் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை ஆா்டா்கள் கைத்தறிக்கும், சீருடை ஆா்டா் ஆட்டோ லூம்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
விசைத்தறித் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். சீருடை ஆா்டா்களை விசைத்தறிகளுக்கு வழங்குவதன் மூலம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, தமிழக அரசு விசைத்தறியாளா்களை அழைத்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி விசைத்தறித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...