92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தடுப்பூசிகளை பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கிய புகாா்

திருப்பூரில் கரோனா தடுப்பூசிகளை பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கிய புகாரின்பேரில் மருந்தாளுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:46 pm

DIN

திருப்பூரில் கரோனா தடுப்பூசிகளை பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கிய புகாரின்பேரில் மருந்தாளுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாநகரில் உள்ள 17 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றடைய வேண்டிய, 800க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அரசு மருத்துவா்களுக்கே தெரியாமல் தனியாா் பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் உத்தரவின்படி மாநகராட்சி 4ஆவது மண்டல மருந்தாளுநா் பாலமுருகன் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், கண்காணிக்க வேண்டிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரிடம் சுகாதாரத் துறை சாா்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.