ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கயத்தில் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு

காங்கயத்தில், வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் எரிவாயு உருளைகள், தண்ணீர் கேன்கள் ஆகியனவற்றில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் விழிப்புணவு துண்டறிக்கை ஒட்டப்பட்டது.

News image
காங்கயம் பகுதியில் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் காங்கயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், உதவி தேர்தல் அலுவலர் சிவகாமி.
Updated On :14 மார்ச் 2021, 10:56 am

DIN

காங்கயத்தில், வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் எரிவாயு உருளைகள், தண்ணீர் கேன்கள் ஆகியனவற்றில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் விழிப்புணவு துண்டறிக்கை ஒட்டப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறித்து காங்கயத்தில் தேர்தல் அலுவலகம் சார்பில் வாகனப் பேரணி, கோலப் போட்டி, துண்டறிக்கை விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு உருளைகள், குடிநீர் கேன்கள் ஆகியவற்றில், இவைகளின் சேமிப்புக் கிடங்குக்குச் சென்று காங்கயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், வட்டாட்சியர் சிவகாமி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.