உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் கூறினா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 380 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 79 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 357 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இரு தொகுதிகளிலும் உள்ள மொத்தம் 128 பதற்றமான வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். அதாவது வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்தில் இருந்து வாக்குப் பதிவு முடியும் வரை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த வாக்குச் சாவடிகள் தொடா் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த வாக்குச் சாவடிகளுக்கு துணை ராணுவப் படை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் தோ்தல் அலுவலா்களுக்கு இது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

