ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கயம் அரசு அலுவலகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

காங்கயத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைவதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 11:19 am

DIN

காங்கயத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைவதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில், முகக்கவசம் அணிவதோடு, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து, வெப்பமானி கொண்டு சோதனை செய்த பின்னரே பொதுமக்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

கரோனா தொற்று தற்போது தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் சென்று அரசு அலுவலகங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என காங்கயம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.