இதன் பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிகிச்சையில் உள்ள நபர்களுக்குத் தேவையான அனைதது அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். அதே வேளையில், ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை, சில இடங்களில் ஆக்சிஜன் வசதி புதியதாக ஏற்படுத்தவும், தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.