ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூரில் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

News image
கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
Updated On :15 மே 2021, 10:15 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வாளகத்தில் கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியான மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சக்குத் தலைமை வகித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிதி முதல்தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தனர். 

இதன் பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிகிச்சையில் உள்ள நபர்களுக்குத் தேவையான அனைதது அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். அதே வேளையில், ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை, சில இடங்களில் ஆக்சிஜன் வசதி புதியதாக ஏற்படுத்தவும், தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த 2 நாள்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது தாராபுரத்திலும் இதற்கு அடுத்தபடியாக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் அரசு மருத்துவமனைகளிலும் முதல் கட்டமாக ஆய்வு நடத்தப்படும். கரோனா பரிசோதனைகளின் முடிவுகளை விரைந்து அறிவிக்கவும், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகின்றனர். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எனினும் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.