ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கயத்தில் பதற வைத்த படிக்கட்டுகள்

காங்கயத்தில், தரைத் தளத்தை விட்டு விலகியிருந்த படிக்கட்டுகள் அதிகாரிகளைப் பதற வைத்தன.

News image
காங்கயம் அருகே, மருந்துக் கிடங்கில் படிக்கட்டுகளுக்கும், தளத்திற்கும் இடையே உள்ள அபாயகர இடைவெளி.
Updated On :31 மே 2021, 8:03 am

DIN

காங்கயத்தில், தரைத் தளத்தை விட்டு விலகியிருந்த படிக்கட்டுகள் அதிகாரிகளைப் பதற வைத்தன.

காங்கயம் அருகே, குள்ளம்பாளையத்தில் அரசு மருந்துக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மருந்துக் கிடங்கினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, மருத்துக் கிடங்கின் பட்டிக்கட்டுகள் தளத்தோடு இணையும் இடத்தில், ஒரு ஆள் நழுவி விழும் அளவுக்கு இடைவெளி இருந்தது. இதனால், மருந்துக் கிடங்கிற்குள் செல்வதற்கு படியில் ஏறிய அதிகாரிகள், படி முடியும் இடத்தில் திடீரென பள்ளம் இருந்ததால், சற்றுத் தடுமாறி, பின்னர் கிடங்கின் உள்ளே நுழைந்தனர். 

இந்தப் படிக்கட்டுகளை சரி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.