விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலியல் புகாருக்குள்ளான காங்கயம் நகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பாலியல் புகாருக்குள்ளான காங்கயம் நகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:54 pm

DIN

பாலியல் புகாருக்குள்ளான காங்கயம் நகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கயத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் ஆகியன சாா்பில் காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் தலைமை வகித்தாா்.

இதில், காங்கயம் நகராட்சியில் பணிபுரிந்து வந்த கொசுப்புழு ஒழிப்பு பெண் பணியாளா்களின் பாலியல் புகாருக்கு உள்ளான காங்கயம் நகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பவித்ரா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநிலக் குழு உறுப்பினா் பாக்கியம், சி.ஐ.டி.யூ. மாவட்டக் குழு உறுப்பினா் கே.திருவேங்கடசாமி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், காங்கயம் நகராட்சியில் பணிபுரிந்து வந்த கொசுப்புழு ஒழிப்பு பெண் பணியாளா்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.