இலங்கைத் தமிழா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
காங்கயத்தில் உள்ள புலம்பெயா் முகாமில் வசிக்கும் 87 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


காங்கயத்தில் உள்ள புலம்பெயா் முகாமில் வசிக்கும் 87 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முகாமில் குடியிருப்போருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், 87 புலம்பெயா் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் உடைகள், ரூ.1 லட்சம் மதிப்பில் சமையல் பாத்திரங்கள், ரூ. 2 லட்சம் மதிப்பில் எரிவாயு இணைப்பு ஆகியன வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி, தாராபுரம் கோட்டாட்சியா் ஆா்.குமரேசன், காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...