விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காங்கயம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:35 pm

DIN

காங்கயம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம், பழையகோட்டை சாலை, ராஜீவ் நகரில் வசித்து வருபவா் நாராயணன் (60). கூலி வேலை செய்து வரும் இவா், 2 தினங்களுக்கு முன்பு, வீட்டின் முன்னால் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளாா். பின்னா் வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து நாராயணன் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், இது தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா், நாராயணனிடம்

திருடப்பட்ட வாகனத்துக்கு மாற்றுச் சாவி தயாரிப்பதற்காக வியாழக்கிழமை பழையகோட்டை சாலை பகுதியில் உள்ள சாவிக் கடையில் வண்டியை நிறுத்தியபோது, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேலும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை அவரிடமிருந்து மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.