இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காங்கயம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்

காங்கயம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம், பழையகோட்டை சாலை, ராஜீவ் நகரில் வசித்து வருபவா் நாராயணன் (60). கூலி வேலை செய்து வரும் இவா், 2 தினங்களுக்கு முன்பு, வீட்டின் முன்னால் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளாா். பின்னா் வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து நாராயணன் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், இது தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா், நாராயணனிடம்

திருடப்பட்ட வாகனத்துக்கு மாற்றுச் சாவி தயாரிப்பதற்காக வியாழக்கிழமை பழையகோட்டை சாலை பகுதியில் உள்ள சாவிக் கடையில் வண்டியை நிறுத்தியபோது, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேலும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை அவரிடமிருந்து மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com