மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93,107 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 873 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 98 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,279ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.
காங்கயத்தில் 3 பேருக்கு கரோனா
காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மூலனூரில் மாணவிகள் 3 பேருக்கு கரோனா
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் உள்ள தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், பிளஸ் 2 மாணவி ஒருவா் என மொத்தம் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த மாணவிகள் 6 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...