தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வழிப்பறியில் ஈடுபட்ட நபா் குண்டா் சட்டத்தில் கைது

 திருப்பூா் மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:16 pm

DIN

 திருப்பூா் மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா், 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட அமா்ஜோதி காா்டன் பகுதியில் 2021ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடந்து சென்ற நபா்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கத்தியைக் காட்டி செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் பி.என்.ராஜன் விசாரணை நடத்தினாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம், கருங்களம் வன்னியராஜா கோயில் வீதியைச் சோ்ந்த எம்.மகாராஜா (19) என்பவரைக் கைது செய்தனா். இவா் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழிப்பறி, கொலை மிரட்டல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்த மாநகர காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.