தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மது விற்பனையில் ஈடுபட்ட 11 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:16 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில், சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேரைக் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 68 மது பாட்டில்கள், ரூ. 800 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். அதேபோல, குன்னத்தூா், பெருமாநல்லூா், குண்டடம், உடுமலை, தளி ஆகிய காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 10 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 446 புகையிலைப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.