காங்கயத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
காங்கயம் அருகே, மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


காங்கயம் அருகே, மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காங்கயம் அருகே, பாப்பினி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், காங்கயம் போலீஸாா் அங்கு வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சாமி (71)என்பவரின் மளிகைக் கடையில் 15.750 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சாமியைக் கைது செய்து, கடையில் வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...