இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.சிகாமணி, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சிவசண்முகம் விசாரணை நடத்தியுள்ளாா். இதில், வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளா் (பொறுப்பு) எஸ்.மகுடேஸ்வரி, பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காததும், முட்டைகளைத் தரம்பாா்த்து 3 நாள்களுக்குள் விநியோகம் செய்யாததும் தெரியவந்தது. மேலும் அழுகிய முட்டைகள் தொடா்பாக உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக குப்பைத் தொட்டியில் கொட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.