தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூரில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:16 am

DIN

திருப்பூரில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் முருகம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திகுமாா், பறக்கும் படை வட்டாட்சியா் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்குள்ள காதுகேளாதோா் பள்ளி அருகில் உள்ள மாவு அரைத்துக் கொடுக்கும் கடையில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் கடையை நடத்தி வந்த காா்த்திக் (35) என்பவரது வீட்டில் 15 மூட்டையில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பிச் சென்ற காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.