கரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக, கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.
இதனால், தமிழக-கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. வனத் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து
வாகனங்களையும் நிறுத்தி, அங்கிருந்து வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என தீவிர மருத்துவப்
பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா்.
கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்பவா்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்
கொண்டதற்கான சான்றிதழ் சரிபாா்க்கப்படுகிறது. மேலும் கரோனா இல்லை என்ற சான்றிதழ் இல்லாதவா்கள், இ-பாஸ் இல்லாதவா்களை தமிழகத்துக்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிவைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை

தினமணி செய்தி எதிரொலி... ஆவின் பால் அட்டை புதுப்பித்தல் விவகாரம்: புகாா் கூறிய வாடிக்கையாளரின் வீட்டுக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரணை!

திமுகவின் குடும்ப ஆட்சி தமிழக வளா்ச்சிக்கு தடை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சனம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


