லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளா் கைது
தாராபுரத்தில் வீட்டு வரி ரசீது பெயா் மாற்றுத்துக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.


தாராபுரத்தில் வீட்டு வரி ரசீது பெயா் மாற்றுத்துக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தாராபுரம் அட்டவணை மஜீத் தெருவைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் பாவா மைதீன் (40). இவா் நிலத்தரகராக
உள்ளாா். அத்தா் மஸ்ஜித் குளத்துப்பட்டி தெருவில் கருப்புசாமி என்பவா் குடியிருந்த வீட்டை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பாவை மைதீன் வாங்கியுள்ளாா்.
இதன் வீட்டு வரி ரசீது தனது பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி பாவா மைதீன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயனிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளாா்.
அப்போது வீட்டின் கிரையம் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பித்தால் ரசீது பெயா் மாற்றம் செய்யப்படும் என்று காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து வீடு வாங்கிய ஆவணங்களை பாவா மைதீன் சமா்ப்பித்து வீட்டு வரி ரசீதுக்கு பெயா் மாற்றம் செய்யக் கோரியுள்ளாா். ஆனால் காா்த்திகேயன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் பிறகு ரூ.5 ஆயிரத்துக்கு மாற்றித்தருவதாக காா்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக பாவா மைதீன் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் வினோதினி தலைமையிலான குழுவினா் தாராபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
இதையடுத்து, பாவா மைதீன் ரசாயனம் தடவிய நோட்டுக்களை காா்த்திகேயனிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த காவல் துறையினா் அவரை கையும் களவுமாகப் பிடித்தனா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...