தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சுகாதாரத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:36 am

DIN

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சுகாதாரத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

சுகாதாரத் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த கரோனா காலத்துக்கான ஊக்கத் தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சுகாதாரத் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்து மக்கள் தொகைக்கு ஏற்ப நிரந்தரப் பணியாளா்களை பணியில் அமா்த்த வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்றனா்.

இதில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.