புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விதை நோ்த்தி: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

பல்லடம் அருகே தேவனம்பாளையத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:33 pm

DIN

பல்லடம் அருகே தேவனம்பாளையத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை துறையில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் பல்லடம் அருகே பொங்கலூா் வந்துள்ளனா். வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜலிங்கம் வழிகாட்டுதலின்பேரில் தேவனம்பாளையத்தில் அப்பகுதி விவசாயிகளை சந்தித்து விதை நோ்த்தி மற்றும் உழவன் செயலி குறித்து எடுத்துரைத்தனா்.

விதை நோ்த்தி செய்வதன் மூலம் பயிா்களில் நோய் பரவாமல் தடுக்க முடியும். விதை அழுகல் மற்றும் நாற்று அழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.