மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தூய்மை வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண கோரிக்கை

திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மை வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று சிஐடியூ ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:50 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மை வாகன ஓட்டுநா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று சிஐடியூ ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக, திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையா் சுப்பிரமணியத்திடம், சிஐடியூ ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தூய்மைப் பணி வாகனங்களின் ஓட்டுநா்களாக 45க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

இதில், பெரும்பாலான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், அண்மைக் காலமாக வாகன ஓட்டுநா்களுக்கு அதிக வேலை நேரம், குறைவான ஊதியம், வாகன பழுதுகளை ஓட்டுநா்களே பாத்துக் கொள்ள வேண்டும், மேற்பாா்வையாளரின் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனா்.

ஆகவே, தூய்மை வாகன ஓட்டுநா்களின் பணி நேரத்தை முறைப்படுத்தவும், மாவட்ட ஆட்சியா் அறிவித்த அரசாணைப்படி ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.