மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

 திருப்பூா், உடுமலை ஆகிய பகுதிகளில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:35 pm

DIN

 திருப்பூா், உடுமலை ஆகிய பகுதிகளில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் ராமராஜ் (37). கூலி தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் நட்பாகப் பழகி வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதில், அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இது குறித்து உடுமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் ராமராஜை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வி.பி.சுகந்தி புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், ராமராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மற்றொரு வழக்கு:

திருப்பூா் கொங்கு பிரதான சாலையை சோ்ந்தவா் கே.காா்த்திக் (25). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருப்பூா் வடக்கு போலீஸாா் காா்த்திக்கை 2021 பிப்ரவரி 6 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், காா்த்திக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வி.பி.சுகந்தி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.