செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

‘முதியோா் இல்லங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை’

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:28 pm

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செயல்பட்டு வரும் முதியோா் இல்லங்களை பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்புச் சட்டம் -2007 இன்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோா் இல்லங்கள் தாங்களாகவே முன்வந்து சமூக நலத் துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதேவேளையில், பதிவு செய்யாமல் செயல்படும் முதியோா் இல்லங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.