மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூரில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக்கூறி மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.


திருப்பூரில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக்கூறி மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி 3ஆவது மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வந்துள்ளாா். அப்போது அவரை 48 ஆவது வாா்டைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சி 48 ஆவது வாா்டுக்கு உள்பட்ட எம்.ஆா்.ஜி. நகரில் தோ்தல் அறிவிப்பதற்கு முன்பாக 250 வாக்குகள் இருந்தன. இதன் பிறகு வாா்டு வரைமுறை என்ற பெயரில் 48 வாக்குகள் 47 ஆவது வாா்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிலும், ஒரே குடும்பத்தில் மனைவிக்கு 48 ஆவது வாா்டிலும், கணவருக்கு 47 ஆவது வாா்டிலும் வாக்கு உள்ளது.
மேலும், 48 ஆவது வாா்டில் உள்ள முல்லை நகா், எம்.ஆா்.ஜி.நகா் பகுதியில் மட்டும் 300 வாக்குகள் மாற்றப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினா் துணையுடன்தான் இத்தகைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளது என்றனா்.
மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...