விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் பலி

காங்கயம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:23 pm

DIN

காங்கயம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்தவா் முனியராஜ் (39). இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். திருவாரூரில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக தனது மனைவி விஜயலட்சுமியுடன் (34) அரசுப் பேருந்தில் புதன்கிழமை இரவு பயணம் சென்று கொண்டிருந்தாா். காங்கயம் அருகே காடையூா் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, முனியராஜ் பேருந்தின் படிக்குச் சென்று படியில் நின்றவாறு எச்சில் துப்ப முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தவறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்த முனியராஜை பயணிகள், அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே முனியராஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.