நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பல்லடம் அருகே ஓடையில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே ஓடையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

News image

பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் ஓடையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :25 ஜூலை 2022, 3:05 pm IST

திருப்பூர்: திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே ஓடையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடத்தை அடுத்த பச்சாபாளையத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உள்பட்ட 8 ஆவது வார்டு பச்சாபாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், எங்களது ஊரில் மழை பெய்தால் ஓடையில் வரும் நீர் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. 

இந்த ஓடையின் அருகில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இரு பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், தனியார் மருத்துவமனை, மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. 

இத்தகைய சூழ்நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் கழிவுகளை ஏற்கெனவே ஓடையில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபராயமும் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது ஓடையில் மின் மயானம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது மக்கள் விரோத திட்டமாகும். இந்த ஓடையில் ஏற்கெனவே நிலவி வரும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாத நிலையில் தற்போது மின் மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.