திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று மனுக்களைப் பெற்று உடனடி தீா்வு காணப்படும். ஆகவே, மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் இந்த முகாம்களில் பங்கேற்று பயனடையலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: திருமுருகன்பூண்டி, தாராபுரம், வெள்ளக்கோவில், கணியூா், செம்மிபாளையம், நெருப்பெரிச்சல், மங்கலம், குரல்குட்டை, நடுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் முகாம் நடைபெறுகிறது.