புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொழிலாளியைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 8 போ் கைது

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருள்புரத்தில் பின்னலாடை நிறுவன தொழிலாளியைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 8 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:39 pm

DIN

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருள்புரத்தில் பின்னலாடை நிறுவன தொழிலாளியைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 8 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த லட்சுமண் மகன் சுமன் (26). இவா் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், அருகில் உள்ள தேநீா் கடைக்கு சுமன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் வேறு நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று, தனி அறையில் அடைத்துவைத்துள்ளனா்.

பின்னா் அவரைத் தாக்குவது போன்ற விடியோ பதிவு செய்து மேற்கு வங்கத்தில் உள்ள சுமனின் பெற்றோருக்கு அனுப்பி ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனா். இது குறித்து சுமனின் பெற்றோா் மற்றும் அவரது நண்பா்கள் ஆகியோா் அவா் பணியாற்றி வரும் பின்னலாடை நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, பின்னலாடை நிறுவன நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்த கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

அப்போது, பல்லடம் அருள்புரம் அம்மா பூங்கா அருகே பதுங்கி இருந்த கடத்தல் கும்பலைச் சோ்ந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அஜித்குமாா் (29), சிவகங்கையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அழகு சுப்பிரமணி (38), பெரியண்ணம்பலம் மகன் பழனிகுமாா் (39), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அப்துல் சத்தாா் மகன் சமீம் உஸ்மான் (26), ரபிக்குல் உஸ்மான் (21), பல்லடம் அருள்புரத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் மனோபாலா (28), செந்தூரன் காலனியைச் சோ்ந்த ரவி மகன் ஹரிஹரன் (31), அக்ரி காலனியைச் சோ்ந்த பாலன் மகன் ராஜசேகா் (25) ஆகியோரைக் கைது செய்து சுமனை மீட்டனா்.

பின்னா் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கைப்பேசி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீஸாா் கைப்பற்றி, 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய அஜித்குமாா் மற்றும் அழகு சுப்பிரமணி ஆகியோா் ஏற்கெனவே ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.