மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோலாகலமாக துவங்கிய அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்  

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை கோலாகலமாக துவங்கியது.

News image
திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
Updated On :12 மே 2022, 4:56 am

DIN

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை கோலாகலமாக துவங்கியது.

கொங்கு ஏழு சிவ தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும்  கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் மே 5ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கப்பட்ட சித்திரைத் தேர்த் திருவிழா மே.18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

சொர்ண அலங்காரத்தில் அருள் பாலித்து வரும் சோமாஸ்கந்தர்

சொர்ண அலங்காரத்தில் அருள் பாலித்து வரும் சோமாஸ்கந்தர்

அதன்படி வியாழக்கிழமை காலை, அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியார்கள், ஆன்மீகப் பெருமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும், திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வருகிறது. திருத்தேரில் சோமஸ்கந்தர் சொர்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  

அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கருணாம்பிகை அம்மன்

அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கருணாம்பிகை அம்மன்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இருக்கும் தேரோட்டத்தில், பல்வேறு அமைப்பினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம், குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது . ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்த் திருவிழாவை, காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.