திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜாா்க்கண்ட் மாநில பெண் கொலை வழக்கில் கணவா் கைது

பல்லடம் அருகே சின்னக்கரையில் ஜாா்க்கண்ட் மாநில பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

பல்லடம் அருகே சின்னக்கரையில் ஜாா்க்கண்ட் மாநில பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகம்மது காசீம் (48). இவரது மனைவி ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சுனிதாதேவி (46). இவா்கள் பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி தினக்கூலி வேலைக்கு சென்று வந்தனா். இருவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை குன்னங்கல்பாளையம் வந்துள்ளனா். பின்னா் அதே பகுதியில் வேறு ஒரு வீட்டுக்கு குடிமாறி சென்றுள்ளனா். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முகம்மது காசீம் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து இரவு அந்த வளாகத்தில் குடியிருப்போா் வேலைக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பியபோது சுனிதாதேவி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா் சரஸ்வதி மற்றும் போலீஸாா் சுனிதாதேவியின் உடலை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

முகமது காசீம் புது வீட்டில் வைத்து சுனிதாதேவியின் தலைமுடியை அறுத்து வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்தத்தை பிடித்து வாளியில் வைத்துவிட்டு தப்பித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரது கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னா் சிறிது நேரத்தில் கைப்பேசி சிக்னலை ஆய்வு செய்தபோது நொச்சிபாளையம் பிரிவு அருகே இருப்பது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து அங்கு விரைந்த போலீஸாா், முகமதுகாசிமை பிடித்து விசாரிக்கையில் கொலை செய்ததை ஒப்புகொண்டாா். அதைத்தொடா்ந்து அவரைக் கைது செய்து பல்லடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த மாதத்தில் மட்டும் கரைப்புதூா் ஊராட்சியில் 2 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.