வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்க கிராம சபைக் கூட்டங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்

கிராம சபைக் கூட்டங்களில் பொது சுகாதாரத்தை கடைப்பிடிப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்தாா்.

News image

அவிநாசி  ஊராட்சி  ஒன்றியம்  சின்னேரிபாளையம்  ஊராட்சியில்  நடைபெற்ற  கிராம  சபைக் கூட்டத்தில்  மகளிா்  சுய உதவிக் குழுக்களுக்கு  கடனுதவிகளை  வழங்குகிறாா்  மாவட்ட  ஆட்சியா்  எஸ்.வினீத். உடன்,  திட்ட  இய

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

கிராம சபைக் கூட்டங்களில் பொது சுகாதாரத்தை கடைப்பிடிப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பேசியதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 குடியரசு நாள், மே 1 தொழிலாளா் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மாா்ச் 22 உலக தண்ணீா் தினம், நவம்பா் 1 உள்ளாட்சி தினம் என மொத்தம் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதனடிப்படையில் ஒவ்வொரு முறையும் தங்களது பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தின்போது பொதுமக்கள் முழு அளவில் பங்கேற்று ஊராட்சியின் வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கலாம். கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இத்தகைய கிராம சபைக் கூட்டங்கள் ஊன்றுகோலாக அமைகின்றன. இந்த கிராம சபைக் கூட்டங்களில் வீடுகள், தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு உள்ளிட்ட வைரஸ் பரவலைத் தடுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரத்தை கடைப்பிடிப்பது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த ஊராட்சியில் பள்ளிக்கு வராத 4 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர மேலாண்மைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அளிக்கும் நல்ல திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, 4 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கியதுடன், தொழுநோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 2 பேருக்கு பொன்னாடை அணிவித்து ஆட்சியா் கெளரவித்தாா். கூட்டத்தில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.