வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரணக் கூட்டம் ஒன்றிய குழு தலைவா் தேன்மொழி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஒன்றிய ஆணையாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்பிரியா, மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஆா்.ஆா்.ரவி: அருள்புரம் - உப்பிலிபாளையம் வரையிலான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அந்த சாலையை சா்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திட்டப்பணிகள் டெண்டா் விடும் போது ஒன்றிய கவுன்சிலா்களுக்கு தகவல் தெரிவதில்லை. உப்பிலிபாளையம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கு வேண்டும்.

கரைப்புதூா் ராஜேந்திரன் (மாவட்ட கவுன்சிலா்): சத்துணவு மையங்களில் சன்ன ரக அரிசி வழங்க வேண்டும்.

லோகநாதன் (சுகாதார ஆய்வாளா்): பூமலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் சுகாதார மையத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும். டெங்கு காய்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி மிக முக்கியமானது. அதற்காக ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் பெரிய அளவிலான கொசு ஒழிப்பு புகை இயந்திரம் ஒன்றை வாங்கி தேவைப்படும் இடங்களுக்கு வழங்க வேண்டும்.

ரமேஷ் (ஒன்றிய ஆணையா்): தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார பணிக்கு கொசு ஒழிப்பு புகை இயந்திரம் வாங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் 47 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.