வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், வள்ளியிரச்சல் ஊராட்சி முத்தூர் வரட்டுக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
ஓலப்பாளையம் - மொட்டகாடு சாலை மற்றும் வரட்டுக்கரை - எல்லை செட் - மேட்டுக்காட்டுவலசு சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த இரண்டு சாலைகளையும் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டு விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் உள்ளூர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!

கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

