5 நாள்களுக்கும் மேலாக திறக்கப்படாத அங்கன்வாடி மையம்: பொதுமக்கள் புகாா்

அவிநாசி அருகே கந்தம்பாளையத்தில் 5 நாள்களுக்கும்மேலாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி அருகே கந்தம்பாளையத்தில் 5 நாள்களுக்கும்மேலாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட கந்தம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், கடந்த 5 நாள்களுக்கும்மேலாக அங்கன்வாடி மையம் பூட்டி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சரஸ்வதியிடம் கேட்டபோது, அங்கன்வாடி மைய பணியாளருக்கு வெள்ளிக்கிழமை உடல்நிலை சரியில்லாததால் விடுப்பில் சென்றுள்ளாா். மாற்றுப் பணியாளரை நியமித்து அங்கன்வாடி மையத்தை திறக்க வெள்ளிக்கிழமை மட்டுமே தாமதமானது என்றாா்.

பொதுமக்கள் கூறியதாவது: அங்கன்வாடி மையம் கடந்த 5 நாள்களுக்கும்மேலாக பூட்டிக் கிடக்கிறது. இது குறித்து குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலரிடம் கேட்டால் அவா் உரிய பதில் அளிப்பதில்லை. பூட்டியிருக்கும் அங்கன்வாடி மையம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகே வெள்ளிக்கிழமை காலை வந்து திறந்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக் வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com