சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

புகையிலைப் பொருள் விற்பனை: மளிகைக் கடைகாரா் கைது

பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:24 pm

DIN


அவிநாசி: பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தொரவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மளிகைக் கடை உரிமையாளரான குமரவேலை சிறாா் நீதி சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.