அவிநாசி: அவிநாசியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள், ரூ.2.14 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேவூா் அருகே உள்ள குட்டகம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதேபோல அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வேனில் வந்த விவேகானந்தன் என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா். அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவிநாசி கருவூலத்தில் ஒப்படைத்தனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

பெருந்துறை அருகே ரூ. 2.42 லட்சம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

