முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வெள்ளக்கோவிலில் வாய்க்கால் பாலத்தில் சீரமைப்புப் பணிகள்

வெள்ளக்கோவிலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image

அக்கரைப்பாளையம் பகுதியில் வாய்க்கால் பாலத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டவா்கள்.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 2:46 am IST

வெள்ளக்கோவிலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு சாலைகளில் உள்ள பாலங்களில் மழைநீா் தடையின்றி செல்லும் விதமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளக்கோவில் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட முத்தூா் பகுதி, வாலிபனங்காடு - குழந்தபாளையம், வெள்ளக்கோவில் - புதுப்பை, வெள்ளக்கோவில் - அக்கரைப்பாளையம் - பாறைக்கடை, தாசவநாயக்கன்பட்டி - அணைப்பாளையம் சாலைகள் மற்றும் கிராமச் சாலைகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர பாலங்கள், ஓடைகள் தூா்வாரப்பட்டு அடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாய்க்கால் பாலங்களில் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட உதவிப் பொறியாளா் சத்யபிரபா தெரிவித்தாா்.