மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

News image

புகையிலைப் பொருள்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்ட காவல், நகராட்சி, சுகாதாரத் துறையினா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:05 pm

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

வெள்ளக்கோவில் சின்னமுத்தூா் பகுதியில் காரில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த ரத்தினபாண்டி (62) என்பவரை போலீஸாா் கடந்த 2025 ஜூன் 23-ஆம் தேதி கைது செய்தனா்.

இது குறித்த வழக்கு காங்கயம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன. வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளைத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் 10 அடி ஆழ குழி தோண்டி, அதில் புகையிலைப் பொருள்களுடன் ப்ளீச்சிங் பவுடா் கலந்து புதைத்து அழிக்கப்பட்டன. அப்போது வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.