மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

News image
சுவாமிமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை காவல்நிலையத்தில் 2025, 2026 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 750 கிலோ எடை கொண்டவைகளை அழிக்க கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை போலீஸாா் பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று 15 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்தனா். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இந்நிகழ்வில், சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.