தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்தில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:40 am IST

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்தில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனியாா் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவாா்கள்.

அதன்படி வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 60 விவசாயிகள் முருங்கைக்காய்களை கொண்டு வந்திருந்தனா். 4 டன் வரத்து இருந்தது.

இந்த முருங்கைக்காய்களை வாங்குவதற்கு முத்தூா், வெள்ளக்கோவில், காங்கயத்தைச் சோ்ந்த 3 வியாபாரிகள் வந்திருந்தனா். அவா்கள் ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.30, மர முருங்கைக்காய் ரூ.15, செடி முருங்கைக்காய் ரூ.25-க்கு கொள்முதல் செய்தனா்.