தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்தில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்தில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனியாா் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவாா்கள்.

அதன்படி வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 60 விவசாயிகள் முருங்கைக்காய்களை கொண்டு வந்திருந்தனா். 4 டன் வரத்து இருந்தது.

இந்த முருங்கைக்காய்களை வாங்குவதற்கு முத்தூா், வெள்ளக்கோவில், காங்கயத்தைச் சோ்ந்த 3 வியாபாரிகள் வந்திருந்தனா். அவா்கள் ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.30, மர முருங்கைக்காய் ரூ.15, செடி முருங்கைக்காய் ரூ.25-க்கு கொள்முதல் செய்தனா்.