சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் உறவினா் கைது
திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.


திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
திருப்பூா், போயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயது பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் அப்பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அங்கு தங்கை முறையான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆசிரியை, சிறுமியிடம் விசாரித்தபோது அந்த இளைஞா் பாலியல் தொல்லையளித்தது தெரியவந்தது.
இது குறித்து குழந்தைகள் நலக்குழு மூலம் திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில், இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...