நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டு வரி, தொழில் வரியை குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாநகரில் உயா்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில் வரிகளைக் குறைக்கக் கோரியும், அடிப்படை வசதி கோரியும் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 டிசம்பர் 2024, 9:46 pm

Din

திருப்பூா் மாநகரில் உயா்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில் வரிகளைக் குறைக்கக் கோரியும், அடிப்படை வசதி கோரியும் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நல்லூா் மாநகராட்சி 3- ஆவது மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகராட்சி 48- ஆவது மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி கோபால்சாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சியில் வீட்டு வரி, தொழில் வரி, குப்பை வரி கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. ஆகவே, உயா்த்தப்பட்ட வரிகளைக் குறைக்க வேண்டும். மாநகராட்சி 48- ஆவது வாா்டுக்குள்பட்ட ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து செவந்தான்பாளையம் செல்லும் சாலை குண்டும்குழியுமாக உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும். நல்லூா் முதல் காசிபாளையம் வரையில் தொடங்கப்பட்ட மழை நீா் வடிகால் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்றனா்.

தொடா்ந்து, மாநகராட்சியைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல உதவி ஆணையா் வினோத்குமாரிடம் மனுக்களை அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் கோபால்சாமி, வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.