நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:19 pm

Din

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மூலனூா் கருப்பன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் கே. செல்வராஜ் (64), விவசாய கூலித் தொழிலாளி. இவா் புதுப்பை அமராவதி ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த 10-ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கலவை வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிகிச்சைக்குப் பின் அவா் வீடு திரும்பிய நிலையில், தலைவலி அதிகமாக இருந்ததால் அவரை திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு குடும்பத்தினா் அழைத்துச் சென்றுள்ளனா்.

தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் செல்வராஜின் மனைவி பாலாமணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.