அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்புப் பயிற்சி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.


திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் கருமாபாளையம் கிராமத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை தேனீ வளா்ப்பு மற்றும் கோழி வளா்ப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
தேனீ வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுவது குறித்தும், தேனில் 35 வகையான உபபொருள்களும் உற்பத்தி செய்வது குறித்தும் தேனீ வளா்ப்பாளா் பாா்த்திபன் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியா் ஆா்.மதிவாணன், கோழி வளா்ப்பு, இளம்குஞ்சு பராமரிப்பு, தீவன மேலாண்மை, கொட்டகை அமைப்பு, நோய்தடுப்பு ஆகியவை குறித்து பேசினாா்.
இதில், நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...