புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அவிநாசி பேரூராட்சியில் ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவு முறை அமல்படுத்த வலியுறுத்தல்

பேரூராட்சியில் அனைவருக்கும் ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:49 pm

Din

பேரூராட்சியில் அனைவருக்கும் ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மோகன், செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலின் உபகோயிலான சுந்தரமுா்த்திநாயனாா் கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தக் கோயிலை உடனடியாக புதுப்பிக்க பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

பேரூராட்சியில் அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் துாய்மைப் பணியாளா்களுக்கு ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும். எரிவாயு மயானம் சீரமைப்புப் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும்.

பழைய பேருந்து நிலையத்தில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட வணிக வளாகத்துக்கு டிடிசிபி ஒப்புதல் பெற வேண்டும்.

கைகாட்டிப்புதுாரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீா் கால்வாய் சேதமடைந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புப் பகுதிக்குள் வெளியேறுகிறது. எனவே, இந்தக் கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

வி.எஸ்.வி. காலனியில் உள்ள காலியிடத்தில் அதிக அளவில் செடிகள் முளைத்து புதா்மண்டியிருப்பதால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புதா்ச் செடிகளை அகற்றி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தொடா்ந்து பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.