அவிநாசி: அவிநாசி அருகே மங்கலம் சாலையில் கார், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் வசித்து வருபவர் சங்கர்(40). இவர் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வஞ்சிபாளையத்திலிருந்து, அவிநாசி நோக்கிக் காரில் சென்றுள்ளார்.
அவிநாசி - மங்கலம் சாலையில் வெங்கமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவிநாசியில் இருந்து மங்கலம் நோக்கி வந்த லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

லாரியை திருநெல்வேலியைச் சேர்ந்த ரோஸ் பாண்டியன் (43) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பலத்த காயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி அருகே கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



